காணாமல்போன இளைஞன் உயிரிழந்தநிலையில் கண்டெடுப்பு!

யாழ்ப்பாணம், சண்டிலிப்பாய் பகுதியில் காணாமல்போன இளைஞனின் சடலம், சங்குவேலி வயல் பகுதியிலுள்ள கிணற்றிலிருந்து இன்று (வியாழக்கிழமை) கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த சடலத்தில் அடிகாயங்கள் காணப்படுவதால், கொலையாக இருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது.

சண்டிலிப்பாயைச் சேர்ந்த ஆனந்தராஜா ஆனந்தபாபு (வயது – 20) எனும் இளைஞனின் சடலமே மீட்கப்பட்டுள்ளது.

தினமும் கூலி வேலைக்குச் செல்லும் குறித்த இளைஞன் நேற்று முன்தினம் வேலைக்குச் சென்ற பின்னர் வீடு திரும்பவில்லையென உறவினர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், இன்று காலை சங்குவேலி வயல் பகுதியிலுள்ள கிணற்றிலிருந்து இளைஞனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அடிகாயங்களுடன் காணப்படும் இளைஞனின் சடலம், மல்லாகம் நீதவானின் உத்தரவிற்கமைய பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்