யாழ் முதியோர் இல்லத்தில் சேர்க்கப்படுவோர் தொகை அதிகரிப்பு

யாழ் கைதடி முதியோர் இல்லத்தில் சேர்க்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கைதடி அரச முதியோர் இல்ல அத்தியட்சகர் த.கிருபாகரன் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

ஆண் முதி­ய­வர்­கள் 44பேரும் பெண் முதி­ய­வர்­கள் 34பேரும் கடந்த ஆண்­டில் இல்­லத்­தில் இணைக்­கப் பட்­டுள்ளனர்.

கடந்த 2012ஆம் ஆண்டு தொடக்­கம் 2017ஆம் ஆண்­டு­வ­ரை­யான காலப்­ப­கு­தி­யில் சேர்க்­கப்­பட்ட முதியவர்களின் எண்­ணிக்­கையை ஒப்­பிட்டு பார்க்­கும்­போது கடந்த ஆண்­டில்­தான் அதிகள­வான முதியவர்கள் இல்­லத்­தில் சேர்க்­கப்­பட்­டுள்ளனர்.

குறிப்­பாக 2012ஆம் ஆண்­டில் 24 ஆண் முதி­ய­வர்­கள் 19 பெண் முதி­ய­வர்­கள் என 44 பேரும், 2013ஆம் ஆண்­டில் 24 ஆண் முதி­ய­வர்­கள் 19 பெண் முதி­ய­வர்­கள் என 44பேரும், 2014ஆம் ஆண்­டில் 32 ஆண் முதி­ய­வர்­கள் 16 பெண் முதி­ய­வர்­கள் என 48பேரும் 2015ஆம் ஆண்­டில் 18 ஆண் முதி­ய­வர்­கள் 23 பெண் முதி­ய­வர்­கள் என 41பேரும், 2016ஆம் ஆண்­டில் 37 ஆண் முதி­ய­வர்­கள் 17பெண் முதியவர்கள் என 54பேரும் சேர்க்­கப்­பட்­ட­னர். தற்­போது இல்­லத்­தில் கிட்­டத்­தட்ட 220 முதி­ய­வர்­கள் தங்­கி­யுள்­ள­னர்.

இதில் 123 ஆண் முதி­ய­வர்­க­ளும், 97 பெண் முதி­ய­வர்­க­ளும் உள்­ள­னர். முதி­ய­வர்­கள் அதிக எண்­ணிக்­கை­யில் சேர்க்­கப்­பட்டு வரு­வ­தால் இல்­லத்­தில் இட நெருக்­கடி ஏற்­ப­டும் நிலை தோன்­றி­யுள்­ள­து என குறிப்பிட்டுள்ளார்.

வடக்­கில் ஒரே ஒரு அரச முதி­யோர் இல்­ல­மாக கைதடி முதி­யோர் இல்­லம் செயற்­பட்டு வரு­கின்­றமை குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்