யாழ்.பல்கலையில் மோதல் நான்கு மாணவர்கள் படுகாயம்! கலைப்பீடத்துக்கு வகுப்புத்தடை!

யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதில் மாணவர்கள் நால்வர் படுகாயம் அடைந்துள்ளனர். கலைப்பீட 3ஆம் மற்றும் நான்காம் வருட மாணவர்களுக்கு இடையில் நடைபெற்ற மோதல் சம்பவத்திலேயே மாணவர்கள் காயம் அடைந்திருக்கின்றனர்.

இதன் தொடராக சட்டம் மற்றும் இராமநாதன் நுண்கலைக் பீடம் தவிர்ந்த ஏனைய கலைப்பீட 3ஆம் மற்றும் 4ஆம் வருட மாணவர்களுக்கு தற்காலிக வகுப்புத்தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மறு அறிவித்தல் வரும் வரை 3 ஆம் மற்றும் 4 ஆம் வருட மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்துக்குள் உட் பிரவேசிக்க தற்காலிக தடை விதிக்கப்படுவதாக கலைப்பீடாதிபதி நேற்று இரவு அறிவித்தார்.

மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட வன்முறையினை அடுத்தே குறித்த அறிவிப்பினை பல்கலைக்கழக நிர்வாகம் விடுத்திருக்கின்றது.

About காண்டீபன்

மறுமொழி இடவும்