திருகோணமலையின் கண்டுகொள்ளப்படாத தமிழ் கிராமங்களை நோக்கி தமிழ் தேசிய மக்கள் முன்னணி தனது பிரச்சாரங்களை ஆரம்பித்துள்ளது.திருமலையின் தென்னமராவடி உள்ளிட்ட கிராமங்களிற்கு முன்னணியின் தலைவர் பொ.கஜேந்திரகுமார் மற்றும் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் பயணம் செய்து மக்களை சந்தித்தனர்.
சந்திப்பின் போது திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்படும் நில அபகரிப்பு மற்றும் அதனை கண்டுகொள்ளாத தமிழ் மக்கள் தலைவர்கள் தொடர்பில் மக்கள் தமது கருத்துக்களினை சீற்றத்துடன் முன்வைத்துள்ளனர்.