வடக்கு ஆளுநரிடம் போகும் டாண் தயா மாஸ்டர்!

தம்மீது ஈபிடிபியின் தூண்டுதலில் தாக்குதல் நடத்தப்பட்டதாக யாழ்ப்பாணத்திலுள்ள டாண் தொலைக்காட்சி தகவல் பரப்பிவந்திருந்த நிலையில் தாக்குதலாளி தெல்லிப்பழை மனநிலை சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.டாண் தொலைக்காட்சியினுள் கத்தி, பொல்லுடன் அத்துமீறி நுழைந்து அந்த நிறுவனத்தின் செய்திப் பணிப்பாளர் தயா மாஸ்டரைத் தாக்கிய வயோதிபரையே சிகிச்சைக்காக தெல்லிப்பழை வைத்தியசாலையில் காவல்துறை அனுமதித்துள்ளது.

கடந்த 9ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது எதிர்வரும் 16 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.
இதன்படி முதியவர் யாழ் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார் மனநிலை பாதிக்கப்பட்டவராக அவர் விசாரணையின் போது நடந்துகொண்டமையால் உண்மை நிலையினை அறிந்துகொள்வதற்காக தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர் தனது மூளைக்குள் இரும்புத் தகட்டைச் சொருகி டான் நிறுவனத்தினர் தன்னிடமுள்ளவற்றை பெறுகின்றனர்.என்னிடம் கைபேசியில்லை, எனது மூளைக்குள் மெமரிகாட் உள்ளது.என அது தேவையான போது கைபேசியாகப் பயன்படுத்துவேன் என்றெல்லாம் தொடர்புகளற்று தகவல் தெரிவித்துவந்திருந்தார்.
இதனிடையே இத்தாக்குதலை ஈபிடிபியின் தூண்டுதலென தெரிவித்து கண்டன அறிக்கை விடுமாறு டாண் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவை தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் முதல் தமிழ் தேசிய மக்கள் முன்னணி மணிவண்ணன் வரை அறிக்கை விடுத்திருந்தமை தெரிந்ததே.

இந்நிலையில் குறித்த தாக்குதல் சம்பவமொரு நாடகமெனவும் வடமாகாண ஆளுநரது தனிப்பட்ட செயலாளர் பதவியை பெற்றுக்கொள்ள தயா மாஸ்டா தயாராகிவருவதாகவும் அதற்கான முன்னேற்பாடேயிதுவென மற்றொரு தகவல் தெரிவிக்கின்றது.

About காண்டீபன்

மறுமொழி இடவும்