தமிழர்களால் நாம் பெருமையடைகிறோம் – பிரித்தானிய பிரதமர்

உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்த பிரித்தானியாவின் பிரதமர் தெரேசா மே தமிழர்களால் நாம் பெருமையடைகிறோம் என தெரிவித்துள்ளார்.

தனது வாழ்த்துச் செய்தியை காணொளியாக வெளியிட்டுள்ள அவர்,

“பிரிட்டன் பல்வேறு வழிகளில் வளர்ச்சியை பெற்றதற்கு தமிழ் சமூகத்தினர் சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளனர். அவர்களால், நாங்கள் பெருமையடைகிறோம். உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் பழமையான இந்த பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாட எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்