வட்டக்கச்சி பாலத்தின் கீழ் இளைஞன் சடலமாக மீட்பு!

கிளிநொச்சி வட்டக்கச்சி பன்னங்கண்டி பாலத்தின் கீழ் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்டவர் வட்டக்கச்சி மயவனூரை சேர்ந்த 22 வயதான இராசேந்திரம் சர்வானந்தம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இளைஞர் அதிகவேகத்தில் உந்துருளியில் சென்றமையால் கட்டுப்பாட்டையிழந்து பாலத்தின் கீழ் விழுந்து பலியாகி இருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

உயிரிழந்த இளைஞர் தொடர்பில் நீதவான் விசாரணைகள் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்