கிளிநொச்சி மாவட்டம் பூநகரி இராணுவமுகாம் ஒன்றில் வைக்கப்பட்டிருக்கும் பெயர்ப்பலகையில் தமிழ்மொழி எழுதப்பட்ட விதம் குறித்து பிரதேச வாசிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.
குறித்த பெயர்ப்பலகையில் உட்பிரவேசிப்பது தவைரயறுக்கப்பட பிரதேசம என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உள்ளே பிரவேசிப்பது வரையறுக்கப்பட்ட பிரதேசம் என்ற வாசகமே இவ்வாறு பிழையாக எழுதப்பட்டுள்ளது.
வாழும் பிரதேசத்தில் இவ்வாறு தமிழ்மொழி கொச்சைப்படுத்தப்பட்டிருப்பது மிகுந்த கவலையைத் தருகின்றது.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை உரியமுறையில் எழுத்துப் பிழைகளின்றி எழுதி காட்சிப்படத்த வேண்டும் – என்று பிரதேசவாசிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.