யாழ்ப்பாணத்தில் மோதிக்கொண்ட சிங்கள மாணவர்கள்!

யாழ்.பல்கலைகழகத்தில் கல்விகற்கும் சிங்கள மாணவர்கள் தமக்குள் மோதிக்கொண்டமையால் திருநெல்வேலி பரமேஸ்வர சந்தியில் பதட்டம் ஏற்பட்டது.
அது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சிரேஸ்ட மாணவர்களுக்கும் கனிஸ்ட மாணவர்களுக்கும் இடையிலையே குறித்த மோதல் சம்பவம் நடைபெற்றது.

சிங்கள கனிஸ்ட மாணவர் ஒருவரின் தலைமுடியை சிரேஸ்ட மாணவர்கள் பகிடிவதையின் போது கத்தரித்தமையால் ஏற்பட்ட முரண்பாடே மோதலுக்கு காரணம் என அறிய முடிகிறது.

குறித்த மோதல் சம்பவம் கடந்த இரவு 9.30 மணியளவில் ஆரம்பித்தது எனவும், முன்னதாக பல்கலைகழகம் முன்பாக மாணவர்கள் மோதிக்கொண்டனர் என்றும்,

பின்னர் அவர்கள் அங்கிருந்து நகர்ந்து பரமேஸ்வரசந்திக்கு வந்தும் மோதிக்கொண்டிருந்தனர் என்றும் தெரியவருகிறது.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு இரு காவல்துறையினரே வந்து இருந்ததாகவும் அவர்களால் மாணவர்களை அப்பகுதியில் இருந்து அகற்ற முடியாத நிலை காணப்பட்டதாகவும் அப்பகுதியில் நின்றவர்கள் தெரிவித்தனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்