வரவு – செலவுத்திட்டத்துக்கு ஆதரவு வழங்கியவர்களுக்கே 2 கோடி ரூபா நிதி – சுரேஷ் பிறேமச்சந்திரன்!

2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவு வழங்கிய தமிழ் தேசியக கூட்டமைப்பின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே 2 கோடி ரூபாய் பணம் வழங்கப்பட்டுள்ளதாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

அபிவிருத்திக்கு கொடுக்கப்பட்ட 2 கோடி ரூபாய் நிதி எதற்காக தமிழ்தேசிய கூட்டமைப்பின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஏன் கொடுக்கப்படவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதன் உண்மையான அர்த்தம் அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவு வழங்கியவர்களுக்கே 2 கோடி ரூபா நிதி வழங்கப்பட்டது என இன்று யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.

2 கோடி ரூபாய் நிதியை அபிவிருத்திக்காக பெற்றார்கள் என்றால் அதில் தவறிருக்காது.

ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கூறுகிறார் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒதுக்கீட்டுக்கு மேலதிகமாக கொடுக்கப்பட்ட நிதியாகவே இந்த 2 கோ டி ரூபாய் நிதி கொடுக்கப்பட்டதாம்.

அப்படியானால் நாங்கள் கேட்கிறோம் மேலதிகமாக 2 கோடி ரூபாய் நிதி லஞ்சமாகவே வழங்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்