புதுக்குடியிருப்பில் வீடு ஒன்றில் இருந்து 288 வாக்காளர் அட்டைகள் மீட்பு – இருவர் கைது

உள்ளூராட்சித் தேர்தலுக்காக வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட வேண்டிய, 288 வாக்காளர் அட்டைகள், முல்லைத்தீவில் வீடு ஒன்றில் இருந்து கைப்பற்றப்பட்டதாக, சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளார்.

புதுக்குடியிருப்பு, தேராவில் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்தே நேற்று நண்பகல் காவல்துறையினரால் இந்த வாக்காளர் அட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

வாக்காளர் அட்டைகள் கைப்பற்றப்பட்ட வீட்டின் உரிமையாளரும், அஞ்சல் காரரும், கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

இவர்கள் விசுவமடு மற்றும் தேராவில் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும், புதுக்குடியிருப்பு காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், அவர் மேலும் கூறியுள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்