இலங்கை இராணுவத்துள் பாரிய பிளவு ஏற்பட்டுள்ளதாக உள்ளக தகவல்கள் வெளியாகியுள்ளது. இராணுவ நலத்திட்டங்களிற்கான நிதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகளை வெளியிட்டு நல்லாட்சி அரசிற்கு எதிரணி தலையிடி கொடுப்பதாக இராணுவ தலைமையகம் கருத்து வெளியிட்டுள்ளது.
முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ஆதரவு அணியின் தூண்டுதலில் படையினரது நலன்களிற்கு ஒதுக்கப்படும் நிதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளதென்ற பிரச்சாரம் தற்போது உச்சம் பெற்றுள்ளது.
இதனிடையே இத்தகைய பிரச்சாரங்களை தவிர்க்குமாறு இராணுவ ஊடகப்பிரிவு நேற்று வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கை மிக அண்மையில் இராணுவத்தினரை சங்கடத்திற்குள்ளாக்கும் செயற்பாடுகள் அவதானிக்கப்பட்ட விடயமாகக் காணப்படுகின்றன. குறிப்பாக படையினரின் கௌரவத்திற்கு பங்கம் விளைவிக்கும் செயற்பாடுகள் இனம் தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்படுவது இராணுவத்தினரினால் கண்காணிக்கப்பட்டுள்ளது.
இராணுவப் படையினரின் வெளிநாட்டுப் பயண வருமானம் உணவு அங்கவீனமுற்ற படையினரின் வருமானம் போன்ற விடயங்கள் உண்மையற்ற கூற்றாக அண்மைக் காலங்களில் ஊடகங்களில் வெளிக்கொணரப்பட்டமை அவதானிக்கப்பட்டுள்ளது.
முதலாவதாக இராணுவத்தினரால் வெளிநாட்டு பயிற்சிகள் மற்றும் சேவைகளுக்காக இராணுவத்தினால் அனுப்பப்படும் படையினரின் வருமானம் தொடர்பான தெளிவான விளக்கத்தை தெளிவுபடுத்தல் அவசியம்.
அந்த வகையில் இப் பயிற்சிகளுக்காக அனுப்பப்படும் முப்படை அதிகாரிக்கான ஒப்பந்தம் மற்றும் மாதாந்த வருமானம் போன்றன இப் படையினர் தமது நாட்டை விட்டு செல்லும் முன்னர் இப் பயிற்சிகளை முன்னெடுக்கும் கம்பனிகள் மற்றும் இலங்கை இராணுவப் படையினரின் ஒருங்கிணைப்போடு இவர்களது முன்னிலையில் படையினர் ஒப்பமிட்ட பின்னரே நாட்டை விட்டுவெளியேறுவர். இதன் போது பொதுவாக இவர்களுக்கான தங்குமிட வாழ்வாதார வசதிகள் போன்றனவும் இவர்களுக்கு வழங்கப்படல்.
அந்த வகையில் 2016, 2017 ஆண்டுகளில் இராணுவத்தினரின் வெளிநாட்டு சேவைகளுக்காக கிடைக்கப்பெறவுள்ள ரூபா 200 மில்லியன் தாமதமடைந்த நிலையில் பாதுகாப்பு அமைச்சின் ஒருங்கிணைப்புடன் அவை ஜனவரி 2018 இல் வழங்குவதற்கான நடவடிக்கைகளை இராணுவத்தினர் மேற்கொண்டுள்ளனர்.
அந்த வகையில் படையினர் தமது கடமையில் இருக்கும் வேளை அவர்களுக்கு போசனை மிக்க மதிய உணவு வேளை தொடர்பான தவறான தகவலும் பிரசுரிக்கப்பட்டமை இராணுவத்தினரால் அவதானிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் போசனை மிக்க இராணுவம் – போசனை மிக்க தேசம் எனும் திட்டமானது கொழும்பு இராணுவத் தலைமையகம் மற்றும் போசாக்கு தொடர்பான ஆலோசனையாளர்களின் அறிக்கையின் படி இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களால் சேவையின் போது முகாமிற்கு உள்ளே மற்றும் வெளியே சேவையாற்றும் படையினருக்கான போசாக்கு மிக்க உணவு வேளை வழங்கப்பட்டல் வேண்டும் என்ற நோக்ககோடு அண்மையில் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் சேவையாற்றும் படையினருக்கு இத்திட்டத்தை முன்னெடுக்குமாறு உயர் அதிகாரிகளுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டமானது மருத்துவ மற்றும் போசாக்கு ஆலோசகர்களின் அனுமதியுடன் நாளாந்தம் படையினருக்கு வழங்கப்படும் உணவு வேளையானது அவர் அல்லது அவளது உடல் வலிமையை மேம்படுத்தும் நோக்கில் 3500 – 4000 கலோரி உள்ளடக்கப்படுதலின் அவசியத்தை எடுத்துக்காட்டிதை மையமாகக் கொண்டே இத்திட்டமானது விக விரைவில் முன்னெடுக்கப்பட்டது.
அந்த வகையில் இப் போசாக்கான உணவுத் திட்டமானது பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் சேவையாற்றும் அனைத்து படையினர்களுக்கும் தரமான போசாக்கான உணவை வழங்கும் நோக்கில் ஜனவரி 1ஆம் திகதி 2018 வரை அமுலுக்கு வரும் நோக்கில் முன்னெடுக்கப்படுகின்றது.
அதேவேளை இராணுவ முகாமிற்கு தமது வீட்டிலிருந்து சேவைக்கு சமூகமளிக்கும் படையினருக்காக புதிய உணவு வேளையை வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்படுகின்றது. அத்துடன் இப்புதிய திட்டமானது அனைத்து படையினரதும் உணவு வருமானம் தொடர்பாக காணப்படுகின்றது.
யாதேனும் இராணுவப் படைவீரருக்கு தமது வீட்டிலிருந்து மாத்திரம் மதிய உணவை உட்கொள்ளல் மற்றும் இத்திட்டத்திற்கு விருப்பமில்லையாயின் அல்லது வேறேதும் பிரச்சினைகள் காணப்படின் தமது பாதுகாப்பு படையின் கட்டளை அதிகாரியிடம் கலந்துரையாடுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதுடன் இதன் போது எவ்வித வருமானக் குறைவும் ஏற்படாது.
அத்துடன் சில அரசியல் நோக்கங்களுக்காக யுத்தத்தின் போது அங்கவீனமுற்ற இராணுவப் படையினரின் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கான 100வீத ஓய்வூதியத்தை வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இராணுவத்தினரால் அதிகார பூர்வமாக வெளியிடப்படுகின்ற ஆட்சேர்ப்பு போன்ற வீடியோக்களை சில அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதுடன் படையினருக்கு அவமதிப்பை ஏற்படுத்தும் செயற்பாடுகள் உள்ளடங்கப்படுவது மிகவும் சங்கடத்திற்குறிய விடயமாகும் .
தேசிய பாதுகாப்பு மற்றும் நல்லிணக்கம் போன்றவற்றை கட்டியெழுப்பும் நோக்கில் செயற்படும் இலங்கை இராணுவத்தை இவ்வாறான கீழ்த்தனமான சமூகத்தில் இழிவை ஏற்படுத்தும் செயற்பாடுகளில் இராணுவத்தை ஈடுபடுத்த வேண்டாமென அனைவரிடமும் இராணுமனது தாழ்மையோடு கேட்டுக் கொள்கின்றதென தெரிவிக்கப்பட்டுள்ளது.