வாக்கு அட்டைகள் இன்றைய தினம் விநியோகம்!

தேர்தலுக்கான ஒரு விசேட நாளாக கருதி இன்றைய தினம் வாக்கு அட்டைகள் விநியோகிக்கப்படுவதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் கடந்த 18 ஆம் திகதி ஆரம்பமானதுடன், எதிர்வரும் 3 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.

இந்த முறை தேர்தலில் ஒரு கோடியே 53 லட்சத்து பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

இதேவேளை, பட்டியலில் உள்ளவர்களை தவிர்ந்த யாரும் உள்ளுராட்சிமன்றங்களின் உறுப்புரிமை பெற்றுக்கொள்ள முடியாதென தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

உள்ளுராட்சிமன்ற தேர்தல் சட்டத்திற்கு அமைய, யாரேனும் ஒரு உள்ளுராட்சிமன்ற உறுப்பினர் பதவி விலகினால், பட்டியலில் உள்ள ஒருவரே அந்த இடத்திற்கு நியமிக்கப்படுவதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இதற்காகவே வேட்புமனுப் பட்டியலில் மேலதிகமாக 3 பேர் இணைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

About காண்டீபன்

மறுமொழி இடவும்