முல்லைத்தீவு கடலில் கிளிநொச்சி இளைஞர் பரிதாப மரணம்!

முல்லைத்தீவு கடற்கரை கடலில் குளித்த இளைஞன் ஒருவர் கடல் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இந்த அசம்பாவிதம் இன்று மாலை 5.00 மணியளவில் நடைபெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடா்பில் தெரியவருவதாவது….

கிளிநொச்சியினை சேர்ந்த இளைஞர்கள் சிலர் முல்லைத்தீவு சுற்றுலா கடற்கரையில் இன்று மாலை குளித்துள்ளார்கள்.

இதன்போது அலை இழுத்து சென்ற நிலையில் உதயநகர் கிழக்கு கிளிநொச்சியினை சேர்ந்த 27 அகவையுடைய ஜெயசங்கர் மயூரன் என்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இவரது உடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

கடற்கரையில் கடலில் இறங்க வேண்டாம் என்ற அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்த விபரீத சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை கடந்த ஆண்டின் இறுதியிலும் இரண்டு மாணவர்கள் இதே பகுதியில் கடலில் மூழ்கி பலியாகியிருந்தமை குறிப்பிடதக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்