சிவசக்தி ஆனந்தனிடம் நூறு கோடி ரூபா கோருகிறது கூட்டமைப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனிடமிருந்து, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நூறு கோடி ரூபா நட்டஈடு கோரியுள்ளது. போலியான குற்றச்சாட்டுகளை முன்வைத்து கூட்டமைப்பின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில், சட்டத்தரணிகளூடாக அவருக்கு இன்று (வெள்ளிக்கிழமை) அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தின் பிரகாரம் கூட்டமைப்பினால் கோரப்பட்ட தொகையை, சிவசக்தி ஆனந்தன், 14 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நட்டஈட்டுத் தொகையை குறித்த கெடு காலத்திற்குள் செலுத்த மறுக்கும் பட்சத்தில் நீதிமன்றம் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளித்தமைக்காக, தன்னைத் தவிர கூட்டமைப்பின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தலா 2 கோடி ரூபாய் அரசாங்கத்தால் வழங்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம் சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

About காண்டீபன்

மறுமொழி இடவும்