மைத்திரிபால சிறிசேன பொலனறுவை ஶ்ரீ வித்தியாலோக்க விகாரையில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் வாக்கினை பதிவு செய்தார்.
கொழும்பு பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வாக்கினை பதிவு செய்தார்.
எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் திருகோணமலை புனித மரியாள் மகளிர் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்தில் வாக்கினை பதிவு செய்தார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வீரகெட்டிய மெதமுலன டீ.ஏ.ராஜபக்ஷ வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்தில் வாக்கினை பதிவு செய்தார்.