முல்லைத்தீவில் விறுவிறுப்பாக தேர்தல் நடைபெற்றுவரும் முள்ளியவளை, புதுக்குடியிருப்பு பகுதிகளில் வேட்பாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட இருவேறு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதில், இரு கட்சியின் வேட்பாளர்கள் இணைந்து மற்றொரு கட்சியின் வேட்பாளரை தாக்கிய சம்பவம் புதுக்குடியிருப்பு பகுதியில் அரங்கேறியுள்ளது.
ஆனால் அவருக்கு பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படவில்லையெனவும், தற்போது இந்த மோதல் சம்பவம் சுமூகநிலைக்கு திரும்பியுள்ளதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இதுதவிர முள்ளியவளை பகுதியில் சுதந்திரக் கட்சியின் வேட்பாளர்கள் ஒருவர் வாக்கு சாவடியின் முன் மேட்டார் சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்த போது, பொலிஸாரினால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். ஆனால் இதுகுறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் எதுவும் பதிவுசெய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மற்றைய கட்சிகளை குற்றஞ்சாட்டும் வகையிலான பல்வேறு கட்சியின் துண்டு பிரசுரங்கள் வீதிகள் போடப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.