பொதுக் கொள்கை என்பதன் ஊடாக ரெலோ அமைப்பின் செயலாளர் சிறிகாந்தா என்ன கூற வருகின்றார் என்பதை அவர் வெளிப்படையாகக் கூற வேண்டும். இவ்வாறு ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
பொதுக்கொள்கையின் அடிப்படையில் தமிழ்க் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும் என்று ரெலோ அமைப்பின் செயலாளர் சிறிகாந்தா அழைப்பு விடுத்திருந்தார். அது தொடர்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் தெரிவித்தாவது,
பொதுக் கொள்கையின் அடிப்படையில் ஒன்றிணையுங்கள் என்று கூறுபவர்கள் அதன் ஊடாக என்ன கூற வருகின்றனர் என்பதை வெளிப்படையாகக் கூற வேண்டும். தமது பொதுக் கொள்கை என்ன என்பதைக் கூறினால் தான் நாம் ஆராய முடியும்.
தேர்தல் காலங்களில் மக்களுக்கு கூறியவற்றுக்கு முற்றிலும் மாறாக புதிய அரசமைப்பில் ஒற்றையாட்சிக்கும், பௌத்தத்துக்கு முன்னுரிமை கொடுக்கவும் இணங்கியுள்ள கூட்டமைப்புடன் கூட்டுச் சேர முடியாது. அப்படியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ரெலோ அமைப்பு அனைவரையும் ஒன்றிணைய அழைப்பது வேடிக்கையாக உள்ளது.
அரசமைப்பு இடைக்கால அறிக்கையை நாம் பொதுக் கொள்கையாக ஏற்றுக் கொள்ள முடியாது. பிழையான விடங்களைச் சரி எனக் கூறிக் கொண்டிருக்கும் கூட்டமைப்புடன் இருந்து கொண்டு இணைப்புப் பற்றிப் பேசிப் பயனில்லை. ரெலோவை பிரிந்து வாருங்கள் என்று கோரவில்லை, அது அவர்களின் சுயவிருப்பு.
தேர்தல் காலத்தில் ஆசனப் பங்கீட்டுக்காக கூட்டமைப்பை விட்டு விலகுகின்றோம் என்று கூறியவர்கள் சில மணி நேரத்திலேயே கூட்டமைப்புடன் இணைந்தனர். நிலையான கொள்கை ஏமு் இல்லாத இவர்கள் அனைவரையும் அழைப்பது வேடிக்கையாக உள்ளது.- என்றார்.