பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவிற்கு எதிராக, நீதி மற்றும் உண்மை செயற்திட்டம் அமைப்பின் யஸ்மீன் சூகா, ஐ.நாவுக்கும் பிரிட்டனுக்கும் அறிக்கை சமர்ப்பித்துள்ளார் என்று சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
பிரிட்டனுக்கான இலங்கைத் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகராக பிரிகேடியர் பிரியங்க கடமையாற்றி வருகின்றார். சுதந்திர தின நிகழ்வுகளின் போது பிரிகேடியர் பிரியங்க, புலம்பெயர் தமிழர்களின் கழுத்தை அறுப்பதாக சைகை செய்தமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
பிரிகேடியர் பிரியங்கவுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை சுமத்தி யஸ் மின் சூகா அறிக்கை சமர்ப்பித்துள்ளார். முல்லைத் தீவு வைத்தியசாலையை போரின் போது தாக்கி அழித்ததாக பிரிகேடியர் பிரியங்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச் சாட்டுக்கள் தொடர்பில் ஏழு பக்கங்கங்களைக் கொண்ட அறிக்கைகள் பிரிட்டனுக்கும், ஐக்கிய நாடுகள் அமைப்புக்கும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது – என்று அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.