முல்லைத்தீவு ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் மாவட்ட மாநாட்டு மண்டபத்தில் தற்போது இடம்பெற்று வருகின்றது.

இணைத்தலைவர்களான வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் தலைமையில் குறித்த கூட்டம் ஆரம்பமாகியுள்ளது.

மாவட்ட அரசாங்க அதிபரின் அறிமுகவுரையுடன் கூட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர்களான சார்ள்ஸ் நிர்மலநாதன், சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும், வடமாகாண சபை அமைச்சர்களான சர்வேஸ்வரன், குணசீலன், சிவனேசன், வடமாகாணசபை உறுப்பினர்களான து.ரவிகரன், புவனேஸ்வரன், அமைச்சின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்