சாவகச்சேரி பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து மேற்கொண்ட சோதனையின்போதே யாழ்ப்பாணம் நாவற்குழிப் பகுதியில் கஞ்சாயுடன் பெண் ஒருவர் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். அவரிடமிருந்து 200 கிராம் கஞ்சா போதைப்பொருளை கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட பெண் நாவற்குழிப் பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவர் என பொலிஸாரின் மேலதிக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.