முல்லைத்தீவில் வாள்வெட்டு-இருவர் வவுனியா மருத்துவமனைக்கு மாற்றம்!

முல்­லைத்­தீவு கிச்­சி­ரா­பு­ரத்­தில் நேற்று முன்­தி­னம் இரவு இடம்­பெற்ற மோதல் மற்­றும் வாள்­வெட்­டுச் சம்­ப­வங்­க­ளில் படு­கா­ய­ம­டைந்த 9 பேரில் இரு­வர் மேல­திக சிகிச்­சைக்­காக வவு­னியா மருத்­து­வ­ம­னைக்கு மாற்­றப்­பட்­டுள்­ள­னர். சம்­பத்­து­டன் தொடர்­பு­டை­ய­வர்­கள் என்று தெரி­வித்து பொலி­ஸா­ரால் கைது செய்­யப்­பட்ட 16 பேரும் மாவட்ட நீதி­வான் மன்­றி­னால் ஆள் பிணை­யில் விடு­விக்­கப்­பட்­ட­னர்.

முல்­லைத்­தீவு கிச்­சி­ரா­பு­ரம் பகு­தி­யில் நேற்­று­முன்­தி­னம் இரவு இரு குழுக்­க­ளுக்கு இடை­யில் பெரும் மோதல் இடம்­பெற்­றது. இரவு 7 மணிக்கு ஆரம்­பித்த மோதல் 11 மணி­வரை நீடித்­தி­ருந்­தது. மோதல், வாள்­வெட்­டுச் சம்­ப­வங்­க­ளில் இரு குழுக்­க­ளை­யும் சேர்ந்த 9 பேர் படு­கா­ய­ம­டைந்­த­னர். அவர்­கள் மாஞ்­சோலை மருத்­துவ மனை­யில் சிகிச்­சைக்­கா­கச் சேர்க்­கப்­பட்­டி­ருந்­த­னர்.

அவர்களில் இரு­வர் மேல­திக சிகிச்­சைக்­காக வவு­னியா வைத்­தி­ய­சா­லைக்கு நேற்று மாற்­றப்­பட்­டுள்­ள­னர். வாள்­வெட்­டுச் சம்­பத்­து­டன் தொடர்­பு­டை­ய­வர்­கள் என்று குற்­றஞ்­சாட்­டப்­பட்டு அந்­தப் பகு­தி­யைச் சேர்ந்த 16 பேர் முள்­ளி­ய­ வ­ளைப் பொலி­ஸா­ரால் கைது செய்­யப்­பட்­டி­ருந்­த­னர்.

மாவட்ட நீதி­வான் மன்­றில் நேற்று அவர்கள் முற்­ப­டுத்­தப்­பட்­ட­னர். விசா­ணை­களை முன்­னெ­டுத்த மன்று பாட­சாலையில் படிக்­கும் மாண­வர்­கள் நான்­கு­பேரை ஜம்­ப­தா­யி­ரம் ரூபா சரீ­ரப் பிணை­யி­னை­யில் விடு­வித்­தது. ஏனைய 12 பேருக்­கும் 50 ஆயி­ரம் ரூபா சரீ­ர­பிணை, மற்றும் 50 ஆயி­ரம் ரூபா ஆள்­பி­ணை­யு­டன் விடு­வித்­தது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்