முல்லைத்தீவு கிச்சிராபுரத்தில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற மோதல் மற்றும் வாள்வெட்டுச் சம்பவங்களில் படுகாயமடைந்த 9 பேரில் இருவர் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். சம்பத்துடன் தொடர்புடையவர்கள் என்று தெரிவித்து பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 16 பேரும் மாவட்ட நீதிவான் மன்றினால் ஆள் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
முல்லைத்தீவு கிச்சிராபுரம் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு இரு குழுக்களுக்கு இடையில் பெரும் மோதல் இடம்பெற்றது. இரவு 7 மணிக்கு ஆரம்பித்த மோதல் 11 மணிவரை நீடித்திருந்தது. மோதல், வாள்வெட்டுச் சம்பவங்களில் இரு குழுக்களையும் சேர்ந்த 9 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் மாஞ்சோலை மருத்துவ மனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டிருந்தனர்.
அவர்களில் இருவர் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு நேற்று மாற்றப்பட்டுள்ளனர். வாள்வெட்டுச் சம்பத்துடன் தொடர்புடையவர்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டு அந்தப் பகுதியைச் சேர்ந்த 16 பேர் முள்ளிய வளைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
மாவட்ட நீதிவான் மன்றில் நேற்று அவர்கள் முற்படுத்தப்பட்டனர். விசாணைகளை முன்னெடுத்த மன்று பாடசாலையில் படிக்கும் மாணவர்கள் நான்குபேரை ஜம்பதாயிரம் ரூபா சரீரப் பிணையினையில் விடுவித்தது. ஏனைய 12 பேருக்கும் 50 ஆயிரம் ரூபா சரீரபிணை, மற்றும் 50 ஆயிரம் ரூபா ஆள்பிணையுடன் விடுவித்தது.