சிரிய படுகொலைகளை கண்டித்து முள்ளிவாய்காலில் போராட்டம்

சிரியாவில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் மனிதப் படுகொலையை நிறுத்தக் கோரும் மாபெரும் கவனயீர்ப்பும் கண்டனப்போராட்டமும் நாளை சனிக்கிழமை இடம்பெறவுள்ளது.

வடக்கு இளைஞர்கள் ஒன்றிணைந்து இறுதிப்போர் இடம்பெற்ற முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் நாளை சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு கவனயீர்ப்பு போராட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இப்போராட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கான போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் நல்லூர் கோவில் முன்றலில் இருந்து காலை 8.00 மணிக்கும் பருத்தித்துறை பேரூந்து நிலையத்தில் இருந்து காலை 8.00 மணிக்கும் விசேட பேரூந்துகள் புறப்படும். எனவே போராட்டத்தில் கலந்து கொள்பவர்கள் உரிய நேரத்திற்குள் குறித்த பேரூந்துகள் புறப்படும் இடத்துக்கு வருகைதருமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்