யாழ்ப்பாணம் மீசாலைப் பகுதியில் 200 கிராம் கஞ்சாவை வைத்திருந்த குற்றச்சாட்டில் 20 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
சாவகச்சேரி பொலிஸாருக்குக் கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலையடுத்து , மேற்கொண்ட சோதனையின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.
மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.