கிளிநொச்சி பரந்தன் பகுதியில் தொடருந்துடன் மோதுண்டு ஒருவர் உயிரிழந்தார்

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் தொடருந்துடன் மோதுண்டு ஒருவர் உயிரிழந்தார்.இந்தச் சம்பவம் இன்று நடந்தது.

பரந்தன் தொடருந்து நிலையத்தில் இருந்து சுமார் 300 மீற்றர் தொலைவில் உள்ள உமையாள்புரம் செல்லும் வீதியில் பாதுகாப்பற்ற கடவையை மோட்டார் சைக்கிளில் கடந்து செல்ல முற்பட்ட வேளையே இந்த விபத்து ஏற்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.

கண்ணகி அம்மன் கோயிலடி மலையாளபுரம் கிளிநொச்சியை சோ்ந்த 36 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்