விஜயகாந்திற்கு இரண்டுவருட சிறை!

தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து உதயசூரியன் சின்னத்தில் யாழ். மாநகரசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் சுதர்சிங் விஜயகாந்திற்கு இரண்டுவருட சிறைத்தண்டனை இன்று விதிக்கப்பட்டுள்ளது.

116 பவுண் நகைகளைக் கொள்ளையிட்ட வழக்கில் அதனை தனது உடமையில் வைத்திருந்தமை நிரூபிக்கப்பட்டதனையடுத்து யாழ். நீதிவான் நீதிமன்றினால் அவர் குற்றவாளியாக இனங்காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.அத்துடன் நகைகளை பறிகொடுத்த குடும்பத்திற்கு எழு இலட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டமையால் அவரது யாழ்.மாநகரசபை உறுப்பினர் பதவியும் இரத்தாகலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

குறித்த நகைத்திருட்டுச் சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கொக்குவில் பகுதியில் உள்ள வங்கி உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டில் குறித்த 116 பவுண் நகைகள் திருடப்பட்டிருந்தன. அந்த நகைகளையே அடகு வைத்த குற்றச்சாட்டில் விஜயகாந் உட்பட நான்கு பேர் 2013 ஆம் ஆண்டு யூலை மாதம் 09 ஆம் திகதி கைது செய்யப்படு யாழ். நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
திருட்டு உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாத போதும் திருடப்பட்ட நகைகளை தம் வசம் வைத்திருந்தது நிரூபிக்கப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணைகளின் பின்னர் விஜயகாந் யூலை 25 ஆம் திகதி பொலிஸார் ஆட்சேபனை தெரிவிக்காததனால் யாழ்.மேல் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டார். குறித்த வழக்கில் விஜயகாந் தரப்பில், ஈபிடிபியின் சார்பில் யாழ் மாநகரசபைத் தேர்தலில் முதன்மை வேட்பாளராகப் போட்டியிடும் முடியப்பு றெமீடியஸ் ஆஜராகிவந்திருந்தார். விஜயகாந் கைது செய்யப்படுவதற்கு முன்னரான காலப்பகுதியில் ஈபிடிபியின் உறுப்பினராக இருந்திருந்தார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்