யேர்மனியில் நடைபெற்ற அனைத்துலக பெண்கள் தின பேரணியில் ஓங்கி ஒலித்த தமிழ்ப்பெண்கள் உரிமைக்குரல்.

யேர்மன் நாட்டின் தலைநகரம் பேர்லினில் அனைத்துலக பெண்கள் தினத்தை முன்னிட்டு பல்லின பெண்களுடன் இணைந்து தமிழ் பெண்கள் அமைப்பு உறுப்பினர்களும் ஈழத்தமிழ் பெண்களுக்கு நீதி கோருவதற்கான வாய்ப்பாக கடைப்பிடித்தார்கள். இப் பேரணியில் ஆயிரக்கணக்கான வேற்றின மக்கள் இணைந்து கொண்டனர்.

நடைபெற்ற பேரணியின் இறுதி நிகழ்வில் ஈழத்தமிழ் பெண்கள் சார்பாக உரையாற்றிய சகோதரிகள் , இன்றும் தாயகத்தில் தமிழ் பெண்கள் சொல்லொணா துன்பத்திலும் , சிங்கள இராணுவத்தின் பாலியல் கொடுமைகளுக்கும் முகம் கொடுத்து வாழ்கின்றனர் என்பதையும், தமிழ் பெண்களின் பாதுகாப்புக்கு தமிழீழம் ஒன்றே தீர்வாக அமையும் என்பதையும் வலியுறுத்தியிருந்தார்கள். அத்தோடு உலகம் எங்கும் அடக்குமுறைக்குள் வாழும் பெண்களுக்கு தமிழ் பெண்கள் சார்பாக தமது தோழமையையும் ஆதரவுக் குரலையும் தெரிவித்தார்கள்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்