தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா ஈ.சரவணபவனுக்கெதிராக யாழ். நகரமெங்கும் மீண்டும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
சரவணபவனின் அழைப்பிற்கிணங்க மைத்திரிபால சிறிசேன மற்றும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா ஆகியோர் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட புகைப்படத்துடன் இச்சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.
திறப்பு விழா ஒன்றிற்கு யாழ் வந்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவபணபவன் தனது மகளின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு அழைத்திருந்தார்.
இந்நிலையிலேயேஇ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் துணைத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவும் கலந்துகொண்டிருந்தமை தமிழ் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.