படுகொலை செய்யப்பட்ட நிலையில் யுவதி ஒருவரின் சடலம் மீட்பு!!

தென் தமிழீழம் ,வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரான் பிரதேச செயலகத்திற்கு அண்மித்த பகுதியில் உள்ள புதருக்குள் இருந்து யுவதி ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.

படுகொலை செய்யப்பட்ட நிலையில் யுவதி ஒருவரின் சடலம் காணப்படுவதாக வாழைச்சேனைப் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கிரான் பிரதேச செயலகத்திற்கு மிகவும் அண்மித்த மதகு மற்றும் வாகை மரங்கள் அடர்ந்த புதர் பகுதியில் யுவதியின் சடலம் கிடப்பது பற்றி பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த யுவதி வெளி நாடொன்றில் வீட்டுப் பணிப்பெண்ணாக தொழில் பார்த்து விட்டுத் திரும்பிருக்கலாம் என்றும், சடலத்தின் அருகே பொருட்கள் சில காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கவுள்ளதாகவும், மோப்ப நாயின் உதவியுடன் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்