வவுனியாவில் இளைஞன் தனது கழுத்தை அறுத்து தற்கொலை!

வவுனியா பண்டாரிக்குளம் பகுதியில் வசித்து வந்த இளைஞன் ஒருவர் இன்று முற்பகல் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா பண்டாரிகுளம் பகுதியில் வசித்து வந்த இளைஞன் ஒருவர் கடந்த இரண்டு தினங்களாக மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டு தனது தயாரிடம் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொள்ளவுள்ளதாக தெரிவித்து வந்துள்ளார். இதையடுத்து இன்று காலை தாயார் வீட்டில் தனது மகனைவிட்டு விட்டு வெளியே சென்றுவிட்டு வீட்டிற்குச் சென்றபோது கழுத்தை கத்தி ஒன்றினால் அறுத்து உயிருக்குப் போராடிய நிலையிலிருந்த சிவநாதன் தவரூபன் 36வயதுடைய இளைஞன் வைத்தியசாலைக்கு எடுத்து வந்தபோதும் உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது சடலம் வைத்தியசாலையின் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பண்டாரிக்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்