யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு கடற்கரையில் இருந்து நபர் ஒருவரின் சடலம்.

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு கடற்கரையில் இருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை குறித்த நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் மத்திய வயதுடைய ஆண் என தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அண்மையில் நயாரு பிரதேசத்தில் கடலுக்கு சென்ற 3 மீனவர்கள் காணாமல் போயுள்ளமையினால் குறித்த மீனவர்களில் ஒருவடைய சடலமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எனினும் அதற்கும் இதற்கும் தொடர்பில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்