திலீபனின் நினைவுத் தூபி புனரமைக்க வேண்டும்!

நல்லூர் பின்வீதியில் உள்ள தியாகதீபம் திலீபனின் நினைவுத்தூபி புனரமைப்புச் செய்யப்பட்டு, அதனை எல்லைப்படுத்தவேண்டுமென வடமாகாணசபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இன்று (17) நடை பெற்ற வடமாகாணசபையின் 102ஆவது அமர்வின் போதே இக்கோரிக்கையை முன்வைத்தார். யாழ். மாநகரசபை ஆணையாளருக்கு இக்கோரிக்கையை விடுத்த அவர் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இதற்கு ஆதரவு வழங்கவேண்டுமெனவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையிலேயே, தான் மாநகர சபை ஆணையாளராக இருந்தபோது தியாக தீபம் லெப்.கேணல். திலீபனின் நினைவுத் தூபியை புனரமைப்புச் செய்து திறந்து வைத்ததாகவும், இதன் காரணமாக தன்மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்