ஈ.பி.டி.பியிடம் ஆதரவு கேட்கவில்லையாம். கூறுவது சுத்துமாத்து எம்.ஏ.சுமந்திரன்.

யாழ்.மாநகரசபையில் ஆட்சியமைக்க தமிழ்தேசிய கூட்டமைப்பு ஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை. தமிழ்தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தவே நா டாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஈ.பி.டி.பியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவுடன் பேசினார். இந்த பேச்சுவார்த்தையில் நாம் ஆதரவு கேட்கவில்லை.

மேற்கண்டவாறு தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் ஊ டக பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார். ஈ.பி.டி.பி கட்சியுடன் தமிழ்தேசிய கூட்ட மைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழரசு கட்சியின் தலைவருமான மாவை சேனாதிரா ஜா பேச்சுவார்த்தை நடத்தியிருந்ததாகவும், இதனடிப்படையிலேயே யாழ்.மாநகரசபையில் ஈ.பி.

பியினர் தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆட்சியமைக்க ஒத்துழைப்பு வழங்கினார்கள் எனவும், சக ல பிரதேச சபைகளிலும் தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆட்சியமைக்க ஈ.பி.டி.பி ஆதரவு வழங் கும். எனவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக கேட்டபோதே நாடாளுமன்ற உறுப்பினர் சுமந் திரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், உள்ளுராட்சி சபை தேர்தல் நிறைவடைந்த உடனேயே தமிழ்தேசிய கூட்டமைப்பு ஒரு பகிரங்மான அறிவி ப்பை விடுத்திருந்தது. அந்த அறிவிப்பு சகல பிரதேச சபைகள் மற்றும் நகர,மாநகர சபைகளி லும் அதிகபடியான ஆசனங்களை பெற்றவர்கள். ஆட்சியமைக்க மற்றவர்கள் உதவவேண்டு ம். என அந்த அறிவிப்பை அப்பட்டமாக மீறும் வகையில் இன்றைய தினம் யாழ்.மாநகரசபை மேயர் தெரிவின்போது இரு கட்சிகள் நடந்து கொண்டன. ஆகவே இனிமேல் எங்களுi டய அறிவிப்பை நாங்கள் மட்டுமே கடைப்பிடித்துக் கொண்டிருப்பதால் பயனில்லை. எனவே நாங்கள் அதனை மீறி சாவகச்சேரி நகரசபையில் அதிகபடியான ஆசனம் பெற்ற தமிழ்தேசிய மக்கள் முன்னணியை பின்தள்ளி நாங்களே ஆட்சியமைத்துள்ளோம். மேலும் யாழ்.மாநகரசபை

மேயர் தெரிவு ஆரம்பமாகும் வரை எந்த கட்சியும் தங்கள் இணக்கப்பாட்டை கூறியிருக்க வில்லை. எனவே இனிவரும் சகல சபைகளிலும் நாங்களே ஆட்சியமைக்கும் வகையில் செய ற்படுவோம். காரணம் நான் முன்னர் கூறியதைபோல் எங்களுடைய நிலைப்பாட்டை நாங்கள் மட்டுமே கடைப்பிடிப்பதால் பயன் ஒன்றும் இல்லை. மேலும் நாங்கள் ஆட்சியமைப்பதற்காக

ஈ.பி.டி.பி கட்சியின் ஆதரவை கேட்டதாகவும், ஈ.பி.டி.பியின் ஆதரவுடனேயே தமிழ்தேசிய கூ ட்டமைப்பு யாழ்.மாநகரசபையில் ஆட்சியமைத்ததாகவும் வெளியாகும் செய்திகள் பொய்யான வை. உள்ளுராட்சி சபைகளில் அதிகபடியான ஆசனங்களை பெற்றவர்கள் ஆட்சியமைக்கலா ம். என்ற எங்களுடைய நிலைப்பாட்டை நாங்கள் வெளிப்படுத்தியோது பிரத்தியேகமாக என்னுடன் ஒன்றும் பேசவில்லை என கூறியிருந்தார். அதற்காக தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஈ.பி.டி.பி கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியிருந்தார். இதன்போது தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவு தாருங்க ள் என கேட்கவில்லை. எங்களுடைய நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளார். அதுவே நடந்தது என்றார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்