ஜெனிவாவில் சிறீலங்காவை பிணையெடுக்கும் கூட்டமைப்பு – ஆதாரம் உள்ளே!

தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனின் வலிகாமம் மேற்கு பிரதேச சபைக்கு ஆட்சியை கூட்டமைப்பு காலில் வீழும் அரசியல் மூல தந்திரோபய படி வென்றுள்ளது.
ஒருபுறம் மனித உரிமைகள் அமர்வு நடைபெற்றுக்கொண்டிருக்க ஜெனிவாவில் நாடாளுமன்றங்களின் ஒன்றிய மாநாட்டில் கரு ஜெயசூர்யா தலைமையிலான சிறிலங்கா குழுவில் ஈ.சரவணபவன் சத்தமின்றி கலந்து கொண்டார்.
தனது ஜெனீவா பயணத்தை முடிமறைத்து அவர் அரசுடன் உறவுபேண அவரது தொகுதியின் சபையினை தெரிவுசெய்வதற்கான அமர்வு இன்று புதன்கிழமை நடைபெற்றது.
ஈ.பி.டி.பி மற்றும் சிங்களக் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் சுயேட்சைக் குழு ஆகியவற்றின் ஆதரவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைத்தது.

25 உறுப்பினர்களைக் கொண்ட வலி.மேற்கு பிரதேச சபைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஒன்பது உறுப்பினர்களும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் ஆறு உறுப்பினர்களும் ஈ.பி.டி.பி சார்பில் நான்கு உறுப்பினர்களும் ஐ.தே.க சார்பில் மூன்று உறுப்பினர்களும் சுயேட்சைக் குழு சார்பில் இரு உறுப்பினர்களும் சிறீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் ஒரு உறுப்பினரும் தெரிவாகியிருந்தனர்.

தவிசாளரைத் தெரிவுசெய்வதற்கான இன்றைய முதல் அமர்வில் முன்னணி தவிசாளர் வேட்பாளராக தேவராசா ரஜீவனை நிறுத்தியிருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடனேந்திரனை நிறுத்தியது.
இதில், ரஜீவனை ந.பொன்ராசா முன்மொழிய ப. நின்மதி வழிமொழிந்தார். நடனேந்திரனை கூட்டமைப்பைச் சேர்ந்த உமாபதி முன்மொழிய ஜெயந்தன் வழிமொழிந்தார்.

இவர்களுக்கு மேலதிகமாக சபையின் நடைமுறையை மீறி ஈ.பி.டி.பியைச் சேர்ந்தவர்களான சி.பாலகிருஸ்ணன் மற்றும் நடராசா ஆகியோரும் நடனேந்திரனை முன்மொழிந்து வழிமொழிந்தனர்.
பகிரங்க வாக்கெடுப்பில் முன்னணி உறுப்பினர்கள் ஆறு பேரும் ரஜீவனுக்கு வாக்களித்தனர்.
நடனேந்திரனுக்கு அவரோடு இணைந்து அக்கட்சி உறுப்பினர்கள் ஒன்பது பேர், ஈ.பி.டி.பியைச் சேர்ந்த நான்கு பேர், ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த மூவர், சிறீPலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஒருவர் மறற்றும் சுயேட்சைக் குழுவைச் சேர்ந்த இருவருமாக 19 பேர் வாக்களித்தனர்.

இதனைத் தொடர்ந்து உப தவிசாளருக்கான தெரிவின்போது கூட்டமைப்பைச் சேர்ந்த வே.சச்சிதானந்தம் அவர்களை அக்கட்சியைச் சேர்ந்த சிவசுப்பிரமணியம் முன்மொழிய ஐ.தே.கட்சியைச் சேர்ந்த குணசிறி வழிமொழிந்தார். வேறு பிரேரிப்புகள் இன்மையால் அவரே உப தவிசாளராக அறிவிக்கப்பட்டார்.
வடக்கிலுள்ள ஏனைய சபைகளுடன் ஒப்பிடுகையில் வலி.மேற்கு பிரதேச சபையில் தவிசாளர் மற்றும் உப தவிசாளரை ஏனைய கட்சிகளும் இணைந்து முன்மொழிந்து வழிமொழிந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்