மீண்டும் சிறை செல்கிறார் சசிகலா!

பரோல் முடிந்ததையடுத்து சசிகலா நாளை மீண்டும் பரப்பன அக்ரஹார சிறைக்கு செல்லவுள்ளார்.

புதிய பார்வை ஆசிரியரும் சசிகலாவின் கணவருமான ம.நடராஜன் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 20 ஆம் தேதி சென்னையில் காலமானார்.

இதையடுத்து கணவர் நடராஜன் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக சசிகலா பெங்களூரு பரபரப்பன அக்ரஹார சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்தார்.

சிறையில் இருந்து பரோலில் விடுவிக்கப்பட்ட சசிகலா தஞ்சாவூரில் மட்டுமே தங்கியிருக்கவேண்டும், சென்னைக்கு செல்லக்கூடாது என்பது போன்ற பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.

இந்நிலையில் சசிகலாவின் பரோல் நிறைவடைந்ததை அடுத்து அவர் நாளை சிறைக்கு செல்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. சசிகலா சாலை மாரக்கமாக சிறைக்கு செல்லவுள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்