தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க இன்று நாடாளுமன்றில் சகல உறுப்பினர்களுடனும் சகஜமான முறையில் சிரித்தவாறு கலந்துரையாடிக் கொண்டிருந்தார்.
தலைமை அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான விவாதம் பரபரப்பாக நாடாளுமன்றில் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.
ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, அமைச்சர்களான லக்ஸ்மன் கிரியெல்ல, கயந்த கருணாதிலக ஆகியோருடன் சிரித்துக் கொண்டு பேசிக் கொண்டிருந்தார்.
அதன் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும், அமைச்சர்களுடனும் ஆசனம் ஆசனமாகச் சென்று பேசிக்கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.