கல்கிஸ்ஸையில் விபச்சார விடுதி சுற்றிவளைப்பு அறுவர் கைது!

கல்கிஸ்ஸை பிரதேசத்தில் ஆயுள்வேத நிலையம் என்ற போர்வையில் நடாத்திச் செல்லப்பட்ட விபச்சார விடுதியொன்று நேற்று கல்கிஸ்ஸை பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டு அறுவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கல்கிஸ்ஸை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது,

கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பான்ஸ் வீதியில் பல வருடங்களாக மறைமுகமாக ஆயுள்வேத நிலையம் என்ற போர்வையில் நடாத்திச் செல்லப்பட்ட விபச்சார விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டு அறுவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கல்கிஸ்ஸை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற விசேட தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே நிலையத்தை நடாத்திச் சென்ற முகாமையாளர் உட்பட விபச்சாரத்தில் ஈடுபட தயாராகவிருந்த அறுவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, அஹுங்கல்ல, மொரகல்லாகம, பொரலஸ்கமுவ, களுத்துறை, அளுத்கம மற்றும் கல்கிஸ்ஸை பிரதேசத்தைச் சேர்ந்த 28 முதல் 32 வயதுடைய பெண்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த அறுவரும் நேற்று கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் கடும் நிபந்தனைகளின் அடிப்படையில் ஒரு இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்