பன்றிக்கு வைத்த மின்சாரத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு! வவுனியாவில் சோகம்!

வவுனியா பறயனாலங்குளம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பன்றிக்கு மின்சாரம் வைப்பதற்கு முயன்றவர் மின்சாரத்தில் அகப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், நேற்று மாலை 7மணியளவில் வட்டக்காடு, பறயனாலங்குளம், செட்டிகுளம் பகுதியிலுள்ள பெரியசாமி முத்துலிங்கம் 58வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் தனது வீட்டிற்கு பின்பக்கமுள்ள காட்டுப்பகுதிக்கு மின்சாரம் பெற்று அதனை பன்றிக்கு வைப்பதற்கு முயன்றபோதே அதில் அகப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே அவரது உறவினர்கள் பொலிஸ் முறப்பாட்டில் அவர் வீட்டிற்கு மின்சாரம் பெறுவதற்கு முயன்றபோதே மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது உடற்கூற்றுப்பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது மேலதிக விசாரணைகளைப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்

About இலக்கியன்

மறுமொழி இடவும்