வடக்கு மாகாண சபையின் இன்று நடைபெற்று வரும் சிறப்பு அமர்வில் முதலமைச்சர் உள்ளிட்ட 17 உறுப்பினர்கள் மதியம் 12.30 மணிக்குப் பின்னர் காணாமல் போயுள்ளனர்.
முல்லைத்தீவு உள்ளிட்ட வன்னி மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் திட்டமிடப்பட்ட சிங்கள குடியேற்றங்கள் தொடர்பிலான சிறப்பு அமர்வு நடைபெற்று வருகிறது.
அதில் 38 உறுப்பினர்களில் 21 உறுப்பினர்கள் தான் தங்களது ஆசனங்களில் அமர்ந்துள்ளனர். முதலமைச்சர் உள்ளிட்ட 17 உறுப்பினர்களின் ஆசனங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன.