முதலமைச்சர் போட்டி களத்தில் டக்ளஸ்

வடக்கு மாகாண முதலமைச்சர் பதவிக்குப் போட்டியிடுவது குறித்து ஆலோசித்து வருவதாக, ஈபிடிபி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.வடக்கு மாகாணசபையின் ஆயுள் காலம் எதிர்வரும் ஒக்ரோபர் 25ஆம் நாளுடன் காலாவதியாகவுள்ளது.

இந்தநிலையிலேயே வடக்கு மாகாணசபைத் தேர்தலில், முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடுவது பற்றி ஆலோசித்து வருவதாக டக்ளஸ் தேவானந்தா கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றிடம் கூறியுள்ளார்.“மாகாணசபைகளின் ஊடாக மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்று நான் நம்புகிறேன்.எனவே, எனது சாட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக ஏன் நான் போட்டியிடக் கூடாது?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்