ஊடகவியலாளர் சிவராமின் 13ஆவது ஆண்டு அஞ்சலி நிகழ்வு மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு இன்று மாலை 4.00 மணியளவில் மட்டக்களப்பு மறைக்கல்வி நிலையத்தில் என்.தேவஅதிரன் தலைமையில் நடைபெற்றுள்ளது.
இதன்போது, அரசியல்வாதிகள், வெளிநாட்டு ஊடகவியலாளர்கள், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள், மலர் தூவி சுடரேற்றி அகவணக்க மரியாதையுடன் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.