தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு

வவுனியா சமயபுரம் பகுதியில் மரமொன்றில் தொங்கிய நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

வுனியா சமயபுரத்தை சேர்ந்த மாரிமுத்து பிரசாந்தன் (வயது-26) என்ற இளைஞனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

குறித்த பகுதியிலுள்ள வீட்டின் மா மரத்திலிருந்து இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று காலை 7.00 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

இளைஞன் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னரே கட்டார் நாட்டிலிருந்து விடுமுறையில் வீட்டிற்கு வந்துள்ளார்.

நேற்று இரவு வீட்டிற்கு வந்த இளைஞன் வழமையாக இருந்துள்ளார். எனினும் இன்று அதிகாலை அயலவர்கள் மாமரத்தில் இளைஞன் தூக்கில் தொங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்