ஹற்றன் நஷனல் வங்கிக்கு தமிழ் மக்கள் கடும் எதிர்ப்பு

ஹற்றன் நஷனல் வங்கிக்கு எதிராக வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் உள்ள மக்கள் கொதித்தெழுந்துள்ளனர். அந்த வங்கியில் உள்ள தமது கணக்குகளை மூடுவதற்கும் அவர்கள் தீர்மானித்துள்ளனர்.

முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களுக்கு வங்கியில் சுடர் ஏற்றியமைக்காக கிளிநொச்சியில் உள்ள ஹற்றன் நஷனல் வங்கியின் உதவி முகாமையாளரும் ஓர் ஊழியரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளமைக்கு கண்டனம் வெளியிட்டுள்ள தமிழ் மக்கள் உடனடியாக அவர்களை இணைத்துக்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

ஹற்றன் நஷனல் வங்கியின் கொழும்புத் தலைமைக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. தமிழர்களின் பணத்தைச் சுரண்டிக்கொண்டு செல்கின்ற அந்த வங்கி தமிழ் மக்களின் இன்ப, துன்பங்களில் பங்கெடுக்க மறுப்பது தொடர்பாகவும் கடும் கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.

பணிநீக்கம் செய்யப்பட்ட உத்தியோத்தர்கள் உடனடியாக மீளப் பணிக்கு இணைத்துக்கொள்ளப்படவேண்டும் எனவும் இல்லையேல் அனைத்து தமிழர்களும் தமது கணக்குகளை மூடி வங்கியின் செயற்பாட்டை முடக்குவது எனவும் அவர்கள் தீர்மானித்துள்ளனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்