முள்ளிவாய்க்கால் நினைவேந் தல் செய்ததாக கிளிநொச்சியில் தனி யார் வங்கி ஊழியர்கள் இடைநிறு த்தப்பட்ட விடயம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஊழியர்கள் வங்கியினுடைய விதிமுறைகளுக்கு முரணாக நட ந்து கொண்டதாக வங்கியால் கூற ப்பட்டது. இது தொடர்பாக
நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனெனில் அன்றைய தினம் அனைவரும் உயிரிழந்தவர்களை நினைவுகூரும்படி முதல்வர் என்ற வகையில் என்னால் அறி வித்தல் வழங்கப்பட்டது.
எனவே எமக்கும் தொடர்புள்ளதா என ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதுடன் இவ்விடயம் தொடர்பாக அவர்களுடன் நேரடியாக பேசவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.