தன்னை மீண்டும் கைது செய்யும் முயற்சி இடம்பெறுவதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கூறியுள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுகின்ற அரசியல்வாதிகளை கைது செய்யும் நடவடிக்கை தொடருவதாக அவர் கூறுகின்றார்.
அதேவேளை தாஜுதீனின் கொலை விவகாரம் தன்னுடைய தம்பியின் காதலியிடமிருந்து ஆரம்பமாகி தனது அம்மா வரை வந்து முடிந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அதேபோல் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க, ராஜபக்ஷக்களுக்கு சொந்தமான 20 காணிகள் உறுதிகளுடன் இருப்பது தொடர்பில் தன்னிடம் தகவல்கள் இருப்பதாக கூறுகின்றார்.
அவ்வாறு இருந்தால் கொண்டு வருமாறு நாமல் ராஜபக்ஷ கூறியுள்ளார்.
மாத்தறை கம்புறுபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.