தென்மராட்சி வடவரணி பகுதியில் உள்ள ஆலயம் JCP இயந்திரத்தின் மூலம் தேர் இழுக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியிலுள்ள ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த மக்கள் தேரை இழுக்ககூடாது என்பதற்காகவே, இந்த “நவீன“ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அந்த பகுதியிலுள்ள ஒடுக்கப்பட்ட சமூகங்களை சேர்ந்த மக்களும் தேர் இழுப்பதற்கு முயற்சிக்கிறார்கள் என ஆலய நிர்வாகம் கடந்த சில வருடங்களாக, அவர்களுடன் மல்லுக்கட்டி வந்தது.
ஆலயத்தில் தேர் இழுக்கும் தமது உரிமையை அந்த மக்கள் விட்டுக்கொடுக்க தயாராக இருக்கவில்லை. இதையடுத்து, இந்த நவீன ஏற்பாட்டில் தேர் இழுக்கப்பட்டுள்ளது.