முன்னாள் போராளிகள் மூன்று பேர் உணவு தவிர்ப்பு போராட்டம்

அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகள் மூன்று பேர் உணவு தவிர்ப்பு போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.

இன்று காலை தொடக்கம் இவர்கள் இவ்வாறு உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடக பேச்சாளர் , துஷார உபுல்தெனிய தெரிவித்தார்.

தமக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு குறித்த வழக்கு செயற்பாடுகளை விரைவில் நிறைவு செய்யக்கோரி இந்த கைதிகள் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்