ஒட்டுசுட்டானில் புலிக்கொடி விவகாரம்: முன்னாள் போராளி கைது!

ஒட்டுசுட்டான் பகுதியில் விடுதலைப் புலிகளின் சீருடை மற்றும் வெடி பொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய, மற்றுமொரு புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளி கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் நேற்று (திங்கட்கிழமை) கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கிளிநொச்சி சாந்தபுரம் 8 ஆம் வீதியை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையே என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் ஒட்டுசுட்டான் பகுதியில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார் முச்சக்கரவண்டி ஒன்றை வழிமறித்து சோதனையிட முற்பட்ட போது, சாரதியும் மற்றொருவரும் அதிலிருந்து தப்பி ஓடியுள்ளார்.

இதன் பின்னர் முச்சக்கர வண்டியை சோதனையிட்ட போது, அதற்குள் விடுதலைப் புலிகள் அமைப்பின் சீருடை, புலிக் கொடி மற்றும் 20 கிலோ எடையுடைய கிளைமோர் குண்டு என்பன மீட்கப்பட்டன.

பின்னர் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவந்த பொலிஸார் ஒருவரை கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்