முல்லைத்தீவில் நடைபெறும் நிலஅபகரிப்புக்கு எதிரான போராட்டத்திற்கு அனைவரையும் அணிதிரளுமாறு அழைப்பு

தமிழர் தாயகத்தின் இதய பூமியாகிய மணலாற்றுப் பகுதியில் வாழ்ந்த தமிழ் மக்கள் கடந்த 1984ஆம் ஆண்டு காலப்பகுதியில் இராணுவ வன்முறைகள் காரணமாக அப்பகுதிகளிலிருந்து முற்றாக வெளியேற நிற்பந்திக்கப்பட்டனர்.

அவ்வாறு வெளியேற்றப்பட்ட தமிழ் மக்களின் காணிகள் மாகாவலி அபிவிருத்திச் சபையினால் கையகப்படுத்தப்பட்டு சிங்கள மக்களுக்கு வழங்கும் செயற்திட்டம் மிக இரகசியமாக முன்னெடுக்கப்படுகின்றது. மகாவலி அபிவிருத்தி என்னும் போர்வையில் திட்டமிட்ட ரீதியில் மேற்கொள்ளப்படும் சிங்கள மயமாக்கலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மாகாவலி எதிர்ப்பு தமிழர் மரபுரிமை பேரவையினால் ஏற்பாடு செய்யப்படும் எதிர்ப்புப் போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பூரண ஆதரவு தெரிவித்துக் கொள்கின்றது.

தமிழர் தாயகத்தின் இதயப்பகுதியை பாதுகாப்பதற்காக மாகாவலி எதிர்ப்பு தமிழர் மரபுரிமை பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போராட்டத்திற்கு அனைத்து தமிழ் மக்களும் அணிதிரண்டு ஒத்துழைக்குமாறு அழைப்பு விடுக்கின்றோம்.

பேரணி ஆரம்பிக்குமிடம்: PWD சந்தி
பேரணி முடிவடையுமிடம்: முல்லை மாவட்ட செயலகம்
திகதி: 28-08-2018 செவ்வாய்க்கிழமை
நேரம்: மு.ப 11.00 மணி

நன்றி

About இலக்கியன்

மறுமொழி இடவும்