திராவிட சுடுகாடு மெரினா.. தமிழர்களுக்கு தீண்டத்தகாத இடம் – சீமான் கடும் விமர்சனம்.!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட எழுவருக்கு வழங்கப்பட்ட தூக்குத்தண்டனையை எதிர்த்து கடந்த 2011 ஆம் ஆண்டு தன்னுடலை தீக்கரையாக்கி உயிர் துறந்த செங்கொடியின் நினைவேந்தல் நிகழ்வு நேற்றைய தினம் சென்னையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடைபெற்றது.

நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திராவிட கட்சிகளின் மீது மிக காட்டமான விமர்சனங்களை முன் வைத்தார். ” தமிழர்கள் நிலத்தில் எதற்காக திராவிட அரசியல், இவை ஆரிய – பார்ப்பனர்களுக்கு எதிரான அரசியல் இயக்கங்கள் என்றால் ஜெயலலிதா 35 ஆண்டுகாலம் ஓர் திராவிட கட்சிக்கு தலைமை வகித்தது எப்படி?” என கேள்வியெழுப்பினார்.

மேலும், “இட ஒதுக்கீடு, சமூக நீதி என்ற பெயரால் மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கின்ற திராவிட இயக்கங்கள். இங்கு கல்வியில் இட ஒதுக்கீடு பெரும் சாதிகளின் பட்டியலில் வெறும் 5 மட்டுமே தமிழ்சாதிகள். மற்றையன எல்லாம் பிற சாதிகள். ஆக, இந்த மண்ணுக்கு சொந்தமில்லாதவர்கள் நம் மக்களை திராவிட அரசியலின் மூலம் ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள்” என காட்டமாக விமர்சித்தார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்